close
Choose your channels

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவ திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

Tuesday, January 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற அதிர்ச்சியான சம்பவங்களில் ஒன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம். இந்த சம்பவத்தில் போராடிய தூண்டிய பல அரசியல் கட்சி தலைவர்கள் தப்பித்து கொள்ள, அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை வைத்து பல கட்சிகளின் தலைவர்கள் அரசியல் செய்தனர்

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த ஒரு திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்களின் உதவியாளர் சந்தோஷ் கோபால் இயக்கி வருகிறார். இந்த படத்திற்குக் 'மே 22' என்று டைட்டில் வைக்கப்பட்டு இதன் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ்சில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது.

இயக்குனர் சந்தோஷ் கோபால் ஏற்கனவே ஜல்லிக்கட்டு, பசுமை வழிசாலை சம்பவங்கள் குறித்த திரைப்படங்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.