close
Choose your channels

நாயகனாக அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு 3 ஜோடிகள்

Sunday, December 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான நாசரின் மகன் லுத்புதின் பாஷா, ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கிய 'சைவம்' மற்றும் 'இது என்ன மாயம்' ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ணவேணி பஞ்சாலை' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தனபால் பத்மநாபன் இயக்கும் அடுத்த படத்தில்தான் நாசர் மகன் லுத்புதின் பாஷா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'காக்கா முட்டை' புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ், சரபம் படத்தில் நடித்த சலோனிலுத்ரா மற்றும் ஒரு புதுமுக நடிகை என மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், இந்த மூவரில் லுத்புதின் பாஷாவுக்கு ஜோடி யார்? என்பது சஸ்பென்ஸ் என படக்குழுவினர் கூறுகின்றனர். ஆனால் மூவருமே நாயகனை ஒருதலையாக காதலிக்கும் படம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் வளர்ந்து வரும் இரண்டு முன்னணி காமெடி நடிகர்களான கருணாகரன், சதீஷ் ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.