close
Choose your channels

டிக்டாக் புகழ் ரெளடிபேபி சூர்யா தற்கொலை முயற்சி: திடுக்கிடும் தகவல்

Monday, June 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா இன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சி செய்ததாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்பூர் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் டிக்டாக்கில் ரெளடிபேபி சூர்யா என்ற பெயரில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் டிக்டாக்கில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் ஏசி அறையிலேயே தான் இருந்து பழக்கப்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யும் அறையில் ஏசி வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்டால் தனக்கு தனி அறை வேண்டும் என்று அடம்பிடித்தார். இதனையடுத்து அவரை சமாதானம் செய்து சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்

இந்த நிலையில் திடீரென இன்று காலை ரெளடிபேபி சூர்யா தனது தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் டிக் டாக் சூர்யாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்

முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிருபருக்கு ரெளடிபேபி சூர்யா கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும் இதனை அடுத்து அந்த நிருபர் போலீசில் புகார் கொடுத்ததால் மன உளைச்சலில் டிக் டாக் சூர்யா இருந்ததாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos