close
Choose your channels

ரஜினிக்கு ஆதரவாக வெளிவந்த தமிழக அரசின் உத்தரவு!

Wednesday, January 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு சில மணி நேரங்களே உள்ளன. இந்த நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே விறுவிறுப்பாக விற்பனையாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு மாஸ் நடிகரின் திரைப்படங்கள் வெளியாகும் போதும் அந்த திரைப்படங்களை சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசிடம் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அனுமதி கோருவது உண்டு அந்த வகையில் தர்பார் திரைப்படத்திற்கும் அதிகாலை காட்சி உட்பட சிறப்பு காட்சிகள் வெளியிட தயாரிப்பு தரப்பிலிருந்து தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ’தர்பார்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தர்பார் திரைப்படம் சிறப்பு காட்சி வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த தீபாவளியன்று வெளியான விஜய்யின் பிகில் திரைப்படத்துக்கு முதலில் தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை என்பதும் அதன் பின்னர் கடைசிநேர பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.