close
Choose your channels

நடிகர் சங்க தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா? நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு!

Friday, June 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த தேர்தலை ரத்து செய்ய பதிவாளர் உத்தரவிட்டார். இதனையடுத்து தேர்தலை நடத்த உத்தரவிடுமாறும் சென்னை ஐகோர்ட்டில் விஷால் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்றும் இன்றும் நடந்து வரும் நிலையில் இன்று மாலை தேர்தலை நடத்துவது குறித்து இடைக்கால தீர்ப்பு அளிக்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்றைய விசாரணையின்போது 'தேர்தலை ஏன் நடத்தக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி ஆதிகேசவலு, தேர்தல் அதிகாரி பத்மநாபன் மீது ஏதேனும் புகார் உள்ளதா எனவும் அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

இன்று மாலை வெளிவரவுள்ள இடைக்கால தீர்ப்பில் நடிகர் சங்க தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படுமா? அப்படியே உத்தரவு பிறப்பித்தாலும் ஐசரிகணேஷ் அணியினர் அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்களா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.