close
Choose your channels

பிரபல பெண் ஆடை வடிவமைப்பாளர் குளியலறையில் மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா?

Sunday, June 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் குளியல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்து உள்ளதால் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபல நடிகர் நடிகைகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக பிரத்யூஷா கரிமெல்லா என்பவர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரத்யூஷா திடீரென குளியல் அறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் அவரது பெற்றோர்களுக்கும் போலிசார் தகவல் அளித்தனர். இந்த நிலையில் பிரத்யூஷா இறந்து கிடந்த குளியலறையில் கார்பன் மோனாக்சைடு சிலிண்டரை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதனால் பிரத்யூஷா மரணம் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.