close
Choose your channels

மீண்டும் ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்த ஊர்வசி ரெளட்டாலா .. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா?

Tuesday, September 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் குறித்து நடிகை ஊர்வசி ரெளட்டாலா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது அவர் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் குறித்து நடிகை ஊர்வசி ரெளட்டாலா சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் மறைமுகமாக தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்து ரிஷப் குறித்துதான் என அவரது ரசிகர்கள் புரிந்து கொண்டு அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதேபோல் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா குறித்தும் ஊர்வசி பகிர்ந்த ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் கூறிய நசீம் ஷா, ‘ஊர்வசி ரெளட்டாலா யார் என்று எனக்கு தெரியாது என்றும் நான் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்றும் கிரிக்கெட்டை பார்ப்பவர்களுக்கு அதிக மரியாதை கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் உடனான சர்ச்சை குறித்த கேள்வி ஒன்று சமீபத்தில் பதிலளித்த ஊர்வசி ரெளட்டாலா, ‘நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் என்றும் மன்னிக்கவும் மன்னிக்கவும்’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து ரிஷப் பண்ட் உடனான அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.