இம்சை அரசனுக்கு வடிவேலு பச்சைக்கொடியா?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'எஸ்' பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தின் படப்பிப்பு ஒருசில மாதங்களே நடந்த நிலையில் வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்காததால் திடீரென நிறுத்தப்பட்டதாக கூறபட்டது.. இதுகுறித்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றபோது வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததால் தங்களுக்கு ரூ.7 கோடி நஷ்டம் என்றும், அந்த பணத்தை வடிவேலுவிடம் இருந்து வாங்கி கொடுக்க வேண்டும் என்று எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்தது
இந்த நிலையில் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இன்னும் இந்த பிரச்சனை முடியவில்லை என்று கூறுவதால் குழப்பம் தொடர்கிறது.
'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன் இந்த படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.