close
Choose your channels

மீண்டும் களம் இறங்குகிறார் வடிவேலு

Tuesday, October 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் அசைக்க முடியாத நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் திடீரென காணாமல் போய்விட்டார். தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வடிவேலுவை புறக்கணித்தனர். இந்த கேப்பில் சந்தானம், சூரி ஆகியோர் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்தாலும், வடிவேலுவின் இடம் இன்னும் காலியாகவே இருப்பதாகத்தான் திரையுலகில் கருதப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவு தந்த வடிவேலு, மதுரை நாடக நடிகர்கள் உள்பட பலரிடம் வாக்கு சேகரித்து விஷால் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்த தேர்தல் காரணமாக இளையதலைமுறை நடிகர்களான விஷால் ,விக்ராந்த், விஷ்ணு ஆகியோர்களிடம் வடிவேலு நெருக்கமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வடிவேலுவின் சகஜமான பேச்சு இளம் நடிகர்களை கவர்ந்துவிட்டதால் அவருக்கு மீண்டும் தங்கள் படங்களில் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோ கனவுகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு மீண்டும் நகைச்சுவை நடிகராக இரண்டாவது இன்னிங்ஸை வெகுவிரைவில் களம் இறங்குகிறார் வடிவேலு. முதலில் விஷால் தன்னுடைய அடுத்த படத்தில் வடிவேலுக்கு கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.