close
Choose your channels

'வல்லமை தாராயோ' சீரியல் நடிகர் திடீர் தற்கொலை: என்ன காரணம்?

Saturday, February 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் பல சின்னத்திரை நடிகர்-நடிகைகள் மீளவில்லை. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சின்னத்திரை நடிகர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் யூடியூபில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’வல்லமை தாராயோ’. இந்த சீரியல் தற்போது ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் லோகேஷ் என்ற கேரக்டரில் நடித்து வந்த ஸ்ரீவத்ஸா சந்திரசேகர் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த புதன்கிழமை அவர் வீட்டை விட்டு சென்ற நிலையில் அவருடைய வீட்டினர் அவரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவரது போன் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்ததாகவும் தெரிகிறது. படப்பிடிப்பில் இருந்தால் சுவிட்ச் ஆப் செய்திருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் அவர் அன்று இரவும் வீடு திரும்பவில்லை என தெரிகிறது.;

இதனையடுத்து அவரை தேடி வந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு சொந்தமான இன்னொரு வீட்டில் அவர் தற்கொலை செய்துகொண்டு இருப்பது மறுநாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவத்ஸா தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பாக தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீவத்ஸா கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீவத்ஸாவின் திடீர் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.