close
Choose your channels

பிரபல சின்னத்திரை நடிகை விபச்சார வழக்கில் கைது

Saturday, June 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வாணி ராணி' சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சங்கீதா, இளம் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்களில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சென்னையை அடுத்த பனையூரில் உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ரிசார்ட்டில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அதிரடி ரெய்டு செய்ததில் அங்கு ஒருசில சின்னத்திரை இளம் நடிகைகளை விபச்சாரத்தில் 'வாணி ராணி' சங்கீதா ஈடுபடுத்தியிருப்பது தெரியவந்தது.

பின்னர் சங்கீதாவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்ற்னர். இந்த விசாரணைக்கு பின்னர் மேலும் சில சின்னத்திரை நடிகைகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.