close
Choose your channels

ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவில் வழக்கு: காவல்துறை ஆணையரிடம் புகார் மனு

Monday, July 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவு மற்றும் பாலியல் புகார் கூறி பணம் பறிக்கும் முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் இந்தியன் மக்கள் மன்றம் என்ற அமைப்பு புகார் அளித்துள்ளது

இந்தியன் மக்கள் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வருபவரும் பத்திரிகையாளருமான வாராகி என்பவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், 'ஸ்ரீரெட்டி இந்திய கலாச்சாரத்திற்கும் பெண்கள் சமுதாயத்திற்கும் இழிவையும் களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். இவரேதான் சினிமா துறையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சம்மதித்து சினிமா துறை இயக்குனர்கள், நடிகர்கள் பலரிடமும் பாலியலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

எனவே இவர் மீது விபச்சார பிரிவின் கீழும், பலரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்ட பிரிவின் கீழும் பெண்கள் சமுதாயத்திற்கும் களங்கம் ஏற்படுத்துதல், சமுதாய சீர்கேடு போன்ற செயலில் ஈடுபட்டுள்ள பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். இந்த புகார் மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.