close
Choose your channels

இந்த ஆளை தூக்குல போடுங்க: நடிகை வரலட்சுமி ஆவேசம்

Tuesday, April 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வரலட்சுமி சமூக சேவைகளில் ஆர்வமுள்ளவர் என்பதும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வரலட்சுமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வடிவேல் தேவேந்திரா என்பவரை தூக்கில் போட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். வரலட்சுமியின் இந்த கோபத்திற்கு என்ன காரணம்?

மும்பையை சேர்ந்த விஜய் தேவரகொண்டா என்ற 35 வயது நபர், கடந்த 2013ஆம் ஆண்டு ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக தண்டிக்கப்பட்டார். ஆனால் ஐந்து வருடங்களில் நன்னடத்தை காரணமாக சிறையில் இருந்து விடுதலையானார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒன்பது வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலையும் செய்து அந்த சிறுமியின் பிணத்தை செப்டிக் டேங்கில் போட்டுள்ளார். சிசிடிவி மூலம் இந்த குற்றத்தை கண்டுபிடித்த போலீசார் மீண்டும் அவரை கைது செய்துள்ளனர்.

ஐந்து வயது சிறுமியை கொலை செய்தபோதே அவருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருந்தால் 9 வயது சிறுமி காப்பாற்றப்பட்டிருப்பார் என்றும், இதுபோன்ற நபர்களை உலகில் நடமாடவிடுவதே தவறு என்றும், இனியாவது தாமதிக்காமல் தூக்கில் போடுங்கள் என்றும் வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.