தலைமறைவாக இருந்த வேந்தர் மூவீஸ் மதன் கைது
Monday, November 21, 2016 தமிழ் Comments
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
Listen to article
--:-- / --:--
1x
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
கடந்த மே மாதம் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாய் மறைந்து போன வேந்தர் மூவீஸ் மதனை மணிப்பூரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவலை சென்னை பெருநகர ஆணையர் உறுதி செய்துள்ளார்.
தலைமறைவான மதன் மீது கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.200 கோடி வாங்கியதாக புகார் உள்ளது. பணம் கொடுத்த பலர் கொடுத்த புகாரின் பேரிலும், மதன் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணார்வு மனு மீதும் விசாரணை நடத்தியதின் பேரிலும் நீதிமன்றம், மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டது
இந்த உத்தரவை அடுத்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் மதனை தேடி வந்தனர். மதனை காசி, நேபாளம் உள்பட பல இடங்களில் தேடுதல் நடத்திய தனிப்படை தற்போது மணிப்பூரில் கைது செய்துள்ளதாகவும், அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.