close
Choose your channels

'மாநாடு' டிராப் குறித்து வெங்கட்பிரபுவின் எமோஷனல் கருத்து!

Thursday, August 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருந்த 'மாநாடு' திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் அதே நேரத்தில் சிம்புவுக்கு பதில் அந்த படத்தில் வேறொரு நடிகர் நடிப்பார் என்றும் விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார் என்பதை பார்த்தோம்.

இதனையடுத்து சிம்பு ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது கருத்தை சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

'மாநாடு' படத்தில் சகோதரர் சிம்புவுடன் பணி புரிய முடியாத ஒரு நிலைக்கு உண்மையில் நான் வருந்துகிறேன். அதே நேரத்தில் தயாரிப்பாளர் அவர்களின் பொருளாதார நிலை மற்றும் பிற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தயாரிப்பாளர் எடுத்த இந்த முடிவுக்கு நான் உடன்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.

ஒரு நல்ல எதிர்பார்ப்புக்குரிய படத்தை சிம்பு இழந்துவிட்டதாக அவரது ரசிகர்களே கூறி வரும் நிலையில் இனிமேலாவது சிம்பு தனது தவறை புரிந்து கொண்டு தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.