close
Choose your channels

பழம்பெரும் நடிகரின் வீட்டில் நடந்த மாமியார்-மருமகள் குடுமிப்பிடி சண்டை!

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகரின் வீட்டில் மாமியார் மருமகள் குடுமிப்பிடி சண்டை போட்டு காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் காலத்தில் இலட்சிய நடிகராக வலம் வந்தவர் எஸ்எஸ் ராஜேந்திரன் என்பதும் இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு எஸ்எஸ் ராஜேந்திரன் மறைந்த நிலையில் அவரது சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் அவரது மகள் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் எஸ்எஸ் ராஜேந்திரன் வீட்டில் காவலாளியை நியமிப்பதில் எஸ்எஸ் ராஜேந்திரன் மகளுக்கும் அவருடைய மாமியாருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இந்த சண்டை ஒருகட்டத்தில் பெரிதாகி ஒருவரை ஒருவர் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டதாகவும் இதனால் எஸ்எஸ் ராஜேந்திரன் மகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் எஸ்எஸ் ராஜேந்திரனின் மகள் மற்றும் அவருடைய மாமியார் ஆகிய இருவரும் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் இந்த புகார் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

‘மாமியார் மெச்சிய மருமகள்’ என்ற திரைப்படத்தில் நடித்து ஏராளமான பெண் ரசிகர்களைப் பெற்ற எஸ்எஸ் ராஜேந்திரன் வீட்டில் மாமியார் மருமகள் குடுமிபிடி சண்டை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.