close
Choose your channels

அன்சேஃப்ன்னு சொல்லிட்டு எதுக்கு பிரதீப்பை கட்டி பிடிக்குறாங்க: விசித்ரா கணவர் ஆவேசம்..!

Wednesday, November 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு ஆபத்தானவர் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பார்வையாளர்கள் கமல்ஹாசனை விமர்சனம் செய்வது மட்டுமின்றி ரெட் கார்டு கொடுத்த அனைத்து போட்டியாளர்களையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து விசித்ராவின் கணவர் பேட்டியளித்த போது அன்சேஃப் என்று சொல்லும் அக்ஷயா மற்றும் ஐஷு ஆகிய இருவருமே இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதீப்பை கட்டி பிடித்துக் கொண்டு இருந்தார்கள். அன்சேஃப் என்று சொல்லப்படும் ஒரு நபரை எதற்காக கட்டிப்பிடிக்க வேண்டும்.

எனது பெற்றோர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஐஷு சொன்னார், இரண்டு நாளைக்கு முன்பு அவர் செய்ததை அவரது பெற்றோர் பார்த்து இருக்க மாட்டார்களா? என்று கூறினார்

மேலும் விசித்ரா பிரதீப்பை ஆதரிக்கவில்லை, அவர் பிரதீப் செய்தது தவறாக இருந்தாலும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிக அதிகம் என்று தான் வாதாடினார்.

ஆரம்பத்திலேயே பிரதீப்பை ஒரு இடைவேளையில் வைத்திருக்க வேண்டும், பிரதீப்புக்கு அதிக இடம் கொடுத்துவிட்டு அதற்கு பிறகு அவர் மீது குற்றம் சாட்டுவது தவறு என்று ரீதியில் தான் விசித்ரா தான் பேசினார் என்று அவரது கணவர் கூறினார்.

அதேபோல் இந்த பேட்டியில் ஜோவிகாவின் படிப்பு மேட்டர் மற்றும் வனிதா கூறிய டாக்டர் பட்டம் குறித்த குற்றச்சாட்டு ஆகியவற்றுக்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார். விசித்ராவின் கணவரின் முழு பேட்டி இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.