close
Choose your channels

திருநெல்வேலிக்காரங்க என்னை நல்லா திட்றாங்க.. 'விடுதலை' பட நடிகர் சேட்டன் பேட்டி..!

Tuesday, April 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருநெல்வேலியில் படம் பார்த்தவர்கள் தனது கேரக்டரை நன்றாக திட்டுகிறார்கள் என ’விடுதலை’ படத்தில் நடித்த நடிகர் சேத்தன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சர்வாதிகார போலீசாக சேத்தன் என்பவர் நடித்திருந்தார் என்பதும் சக காவல் துறை ஊழியர்களை மதிக்காத ஒரு கேரக்டரில் அவர் நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்து இருந்தது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் நடிகர் சேத்தன் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ’இந்த படத்தை பார்த்து திருநெல்வேலியில் இருந்து சிலர் என்னை திருநெல்வேலி பாஷையில் திட்டினார்கள் என்றும் அதுவே எனது கேரக்டருக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்தார். முதலில் சூரி ஹீரோ என்றவுடன் இந்த படத்தில் நடிக்க வேண்டுமா என்று எனக்கு தோன்றியது என்று ஆனால் சூரி இந்த படத்தில் நடிக்கும் போது பட்ட கஷ்டத்தை நான் நேரில் கண்டபோது அவர் மீது எனக்கு மதிப்பு வந்தது. படப்பிடிப்பில் காயம் ஏற்பட்ட போது தையல் போட்டுவிட்டு அவர் உடனே வந்து நடிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் ’பொல்லாதவன்’ படத்தில் தான் முதலில் நான் நடித்தேன் என்றும் அதன் பிறகு இந்த அழுத்தமான கேரக்டரை எனக்கு வெற்றிமாறன் கொடுத்திருக்கிறார் என்று வெற்றிமாறன் படத்தை எப்படி மிஸ் செய்ய முடியும் என்பதால் இந்த படத்தில் நான் நடித்தேன் என்றும் அவர் தெரிவித்தார். 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் நான் நடித்திருக்கும் நிலையில் இந்த கேரக்டர் நன்றாக வந்திருக்கிறது என்று சொல்லும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.