close
Choose your channels

மூன்றாம் பிறை ரீமேக்: வித்யாபாலன் கூறிய வித்தியாசமான பதில்

Wednesday, October 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய படம் 'மூன்றாம் பிறை'. கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருதும், பாலுமகேந்திராவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் பெற்று தந்த படம் இது. காலத்தால் அழியாத காதல் காவியமான இந்த படம் இந்தியில் டப் செய்யப்பட்டு 'சத்மா' என்ற பெயரில் ரிலீஸ் ஆகி அங்கும் சூப்பர் ஹிட் ஆனது

இந்த நிலையில் தற்போது பழைய படங்களை ரீமேக் செய்யும் டிரெண்ட் இருந்து வரும் நிலையில் 'மூன்றாம் பிறை' படத்தையும் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகவும், இந்த ரீமேக் படத்தில் ஸ்ரீதேவி கேரக்டரில் வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து நடிகை வித்யாபாலன் கூறியதாவது:

"நான் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க மாட்டேன். அப்படி ஒரு படத்தில் நடிக்க எனக்கு தைரியம் கிடையாது. சத்மா ரீமேக் என்னிடம் வந்தது ஆனால் நான் மறுத்துவிட்டேன். சத்மா போன்ற ஒரு படத்தை யாரும் தொடக்கூடாது. ஏன் அதை மீண்டும் எடுக்க வேண்டும்? அது காலத்துக்கும் நிலைத்து நிற்கும் படம். அதை மீண்டும் வேறு கோணத்தில் பார்க்கலாம் ஆனால் அதற்கான ஆள் நானில்லை' என்ற வித்தியாசமான பதிலை வித்யாபாலன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.