close
Choose your channels

இந்த சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்காதீர்கள்.. பிறகு வருத்தப்பட்டு பயனில்லை: விஜய் ஆண்டனி

Sunday, March 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம் என்றும் பிறகு வருத்தப்படுவீர்கள் என்றும் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறிய போது ’மக்கள் கையில் உள்ள ஒரே ஆயுதம் வாக்கு சீட்டு தான், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் தயவு செய்து யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம், எல்லோரும் நோட்டாவுக்கு வாக்களித்துவிட்டால் யாரை நாம் தேர்ந்தெடுப்பது என்று கூறிய அவர் தேர்தலில் போட்டியிடுபவர்களில் சிறந்தவர் யார் என்பதை முடிவு செய்து அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் வழக்கமாக 65 முதல் 67% தான் வாக்கு பதிவு நடைபெறுகிறது என்றும் குறைந்தபட்சம் 90 முதல் 95% வாக்களிக்க மக்கள் முன் வரவேண்டும் என்றும் வாக்களிக்காமல் இருந்துவிட்டு அதன் பிறகு வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.