close
Choose your channels

என் தந்தை கட்சியில் யாரும் சேர வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை

Thursday, November 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் பெயரில் நான் தான் கட்சி ஆரம்பிக்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன் என்று சற்றுமுன் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில் இதுகுறித்து விஜய் விளக்கமளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று என்‌ தந்‌தை திரு.எஸ்‌.ஏ.சந்திரசேகர்‌ அவர்கள்‌ ஓர்‌ அரசியல்‌ கட்சியை ஆரம்பித்துள்ளார்‌ என்பதை ஊடகங்களின்‌ வாயிலாக அறிந்தேன்‌. அவர்‌ தொடங்கியுள்ள கட்சிக்கும்‌ எனக்கும்‌ நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும்‌ இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும்‌ பொதுமக்களுக்கும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

இதன்‌ மூலம்‌ அவர்‌ அரசியல்‌ தொடர்பாக எதிர்காலத்தில்‌ மேற்கொள்ளும்‌ எந்த நடவடிக்கைகளும்‌ என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்‌. மேலும்‌ எனது ரசிகர்கள்‌, எனது தந்‌தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில்‌ இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம்‌ என கேட்டுக்கொள்கிறேன்‌. அக்கட்சிக்கும்‌ நமக்கும்‌ நமது இயக்கத்திற்கும்‌ எவ்வித தொடர்பும்‌ கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

மேலும்‌ என்‌ பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய்‌ மக்கள்‌ இயக்கத்தின்‌ பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும்‌ விவகாரங்களில்‌ ஈடுபட்டால்‌ அவர்கள்‌ மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.