close
Choose your channels

கைகழுவியது ஒரு குற்றமா? விஜய் ரசிகர்கள் புலம்பல்

Friday, October 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமலாபால் நடித்த ’சிந்து சமவெளி’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் சாமி, விஜய் குறித்து நேற்று ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறி உள்ளார். விஜய் தனது ரசிகர்களை சந்தித்து கைகுலுக்கிய பின் உடனே தனது கையை டெட்டால் போட்டு கழுவுவார் என்றும், அவர் படத்தில் மட்டும் நடிக்கவில்லை நிஜத்திலும் நடிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் இங்கு அரசியல் செய்ய பல தலைவர்கள் இருக்கின்றார்கள் என்றும், நீங்கள் அரசியலுக்கு வரத் தேவையில்லை என்றும் கருத்து சொல்லவும் வேண்டாம் என்றும், இது மாதிரி பொதுவெளியில் நடிப்பதை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வைத்து விஜய்யையும் விஜய் ரசிகர்களையும் அஜித் ரசிகர்கள் தாக்கி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் இதற்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் ஆகட்டும் , பிரமுகர்கள் ஆகட்டும், மற்ற நடிகர்கள் ஆகட்டும் ரசிகர்களுடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்த பின் கைகளை சுத்தப்படுத்துவது என்பது ஒரு சாதாரண விஷயம்தான். இதனை தீட்டு, தீண்டாமை என்று சொல்லக்கூடாது. ரசிகர்களை சந்திக்கவும், கைகுலுக்கவும் மறுக்கும் நடிகர்கள் மத்தியில் விஜய் தனது ரசிகர்களுடன் கைகுலுக்குவது மட்டுமின்றி அவர்களுடைய இன்ப, துன்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

விஜய் ரசிகர்களுடன் கைகுலுக்கி விட்டு அதன் பின் சுத்தம் காரணமாக கையை கழுவுவது தவறா? அப்படி என்றால் இதற்கு முன் ரசிகர்களை கட்டி அணைத்து விட்டு கை குலுக்கிவிட்டு யாரும் கை கழுவியது இல்லையா? விஜய்யை மட்டும் இவ்வாறு குற்றம் சொல்வது ஏன்? என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

மொத்தத்தில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.