close
Choose your channels

அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

Tuesday, April 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் முதல் நபராக உதவிக்கு வருபவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்ததே.

இதற்கு முன்னர் ஏற்பட்ட புயல், வெள்ளம் உள்பட பல்வேறு இயற்கை பேரிடரின் போதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தான் முதலில் முன்வந்து பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.