close
Choose your channels

234 தொகுதிகள்: ஜூனில் தளபதி விஜய்யின் பிரமாண்ட திட்டம்..!

Thursday, May 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்திக்க தளபதி விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது என்பதும், அதில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு பரிசளிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த விழா ஜூன் இரண்டாம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை மட்டும் இன்றி பெற்றோர்களை இழந்த சூழ்நிலையிலும் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் அவர் சந்திக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் மாணவ மாணவிகளின் அடுத்த கட்ட படிப்பிற்கு தேவையான ஊக்க தொகையும் விஜய் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

234 தொகுதிகளிலும் உள்ள மாணவ மாணவிகளை விஜய் சந்திக்க இருக்கும் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.