close
Choose your channels

'தெறி' கிளைமாக்ஸில் அட்லியை அசத்திய விஜய்

Monday, December 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தெறி' படத்தின் கோவா படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விஜய்யுடன் இந்த காட்சியில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டைக்கலைஞர்கள் நடித்து வருகின்றனர். இந்த கிளைமாக்ஸ் காட்சியின் ஒரு பகுதியில் ஒரு பெரிய கிரேனில் தொங்கியபடி விஜய் சண்டைபோடும் காட்சி ஒன்று வருவதாகவும், இந்த ரிஸ்க்கான காட்சியில் விஜய் டூப் இன்றி எவ்வித தயக்கமும் இன்றி நடித்து இயக்குனர் அட்லியை அசத்தியதாக கூறப்படுகிறது.

கிரேன், ஜிம்மி ஜிப்பி போன்ற கருவிகளை வைத்து இந்த சண்டைக்காட்சியை 6 நவீன கேமராக்கள் கொண்டு பல்வேறு கோணங்களில் படமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'தெறி' படம் ரிலீஸாகும்போது இந்த சண்டைக்காட்சி விஜய் ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.