close
Choose your channels

மாஸ்டர்' ஆடியோ விழாவில் விஜய் கூறிய குட்டிக்கதை!

Sunday, March 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் கூறிய குட்டிக்கதை குறித்து தற்போது பார்ப்போம்: அவர் கூறியதாவது.

என்னுடைய படத்திலேயே ஒரு பாடல் இருக்கிறது. அனைவரும் கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ’எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே, நீ நதி போல ஓடிக்கொண்டிரு’ இந்த பாடலை நீங்கள் அனைவரும் கேட்டு இருப்பீர்கள். நதி போல ஓடிக்கொண்டு இருப்பது என்பதுதான் கிட்டத்தட்ட நம் அனைவருடைய வாழ்க்கையும்.

அதாவது ஒரு நதி ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு அதனுடைய தனி பாதையில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு இடத்தில் கொஞ்சம் பேர் கூடி நின்று விளக்குகளை ஏற்றி நதியை வணங்குவார்கள். நதி போய்க்கொண்டே இருக்கும். இன்னொரு இடத்தில் சில பேர் பூக்களைத் தூவி நதிகளை வரவேற்பார்கள். அப்படியும் அந்த நதி தன்னுடைய பாதையில் போய்க் கொண்டே இருக்கும். இன்னொரு இடத்தில் சில பேர் அதாவது பிடிக்காத சிலபேர் கல்லெறிந்து விளையாடுவார்கள். அப்போதும் நதி அதுபாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கும். அதுபோல் நம்ம வாழ்க்கையில் நம்மளை வணங்குபவர்களும் இருப்பார்கள், நம்மை வரவேற்பவர்களும் இருப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.