close
Choose your channels

எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி!

Saturday, September 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று பிற்பகல் காலமானதை அடுத்து அவருக்கு ஒட்டுமொத்த திரையுலக பிரமுகர்களும் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் இரங்கல் தெரிவித்தனர்

தளபதி விஜய், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் அமீர், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், பாடகர் மனோ உள்பட பலர் தாமரைப்பாக்கத்தில் நேரில் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய்சேதுபதி, டாப்ஸி, ராதிகா உள்பட படக்குழுவினர் விஜய் சேதுபதியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு அதன் பின் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

விஜய்சேதுபதி, டாப்சி முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை பழம்பெரும் இயக்குனர் சுந்தர்ராஜன் அவர்களின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.