close
Choose your channels

விஜய் வருகையால் மீண்டும் கேரளாவில் ஓணம்.. மலையாளத்தில் பேசிய தளபதியின் வீடியோ வைரல்..!

Thursday, March 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் தற்போது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினமும் காத்திருப்பது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் தினமும் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் ரசிகர்களை பார்த்து கை அசைக்கிறார் என்பதும் செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் வெளியான செய்தியையும் புகைப்படத்தையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நேற்று ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் ரசிகர்கள் மத்தியில் பேசினார். அதுவும் மலையாளத்தில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் ’சேச்சி... சேட்டன்மார், நீங்கள் ஓணம் பண்டிகையின் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பீர்களோ அதே மகிழ்ச்சியை உங்கள் முகத்தில் நான் பார்க்கிறேன், அதை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்’ என்று அவர் மலையாளத்தில் பேசினார்.

இந்த நிலையில் விஜய்யை பார்க்க வந்த கூட்டத்தை பார்க்கும்போது கேரளாவில் மீண்டும் ஓணம் பண்டிகை வந்துவிட்டது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.