close
Choose your channels

விஜய் டிவியால் பலமுறை ஏமாந்தேன்: யாஷிகா வெளியேற்றம் குறித்து ஸ்ரீபிரியா

Monday, September 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் அவருடைய கட்சியின் முக்கிய நிர்வாகியும், நடிகையுமான ஸ்ரீப்ரியா, யாஷிகா வெளியேற்றம் தனக்கு அதிருப்தியை அளித்ததாக கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி மற்றும் யாஷிகா வெளியேற்றப்பட்டனர். நான்காவது வாரத்தில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டிய ஐஸ்வர்யாவை கடைசி வரும் காப்பாற்றும் நோக்கில் ஒவ்வொரு வாரமும் ஒருவரை பலிகடா ஆக்கி வரும் பிக்பாஸ், இந்த வாரம் யாஷிகாவை பலிகடாவாக்கிவிட்டதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் யாஷிகாவின் வெளியேற்றம் தனக்கு தனக்கு அதிருப்தியை அளித்ததாகவும், இதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும், அவருக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமின்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் சத்யபிரகாஷ் மற்றும் ஸ்ரீகாந்த் டைட்டில் பட்டத்தை வெல்லாதது தனக்கு ஏமாற்றம் அளித்ததாக ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.