close
Choose your channels

இராமாயணத்துடன் கனெக்ஷன் ஆன விக்ரம்-நயன்தாரா படம்.

Thursday, November 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'10 எண்றதுக்குள்ள' படத்தை அடுத்து 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைடிட்ல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு மர்ம மனிதன்' மற்றும் 'மாரீசன்' ஆகிய இரண்டு டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 'மாரீசன்' என்ற டைட்டில் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

'மாரீசன்' என்பது இதிகாசங்களில் ஒன்றாகிய இராமாயணத்தில் ராமரையும் சீதையையும் சூழ்ச்சியாக பிரித்த மான் ஒன்றின் கேரக்டர். இதேபோல் ஒரு சூழ்ச்சியான கேரக்டரில் விக்ரம் வித்தியாசமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு வித்தியாசமான மேக்கப் போட ஹாலிவுட் கலைஞர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'புலி' தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபுதமீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், முத்துராஜ் கலை இயக்குனராகவும் இந்த படத்தில் பணிபுரியவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.