close
Choose your channels

பொங்கலுக்கு முன் தொடங்குகிறது விக்ரமின் அடுத்த படம்

Wednesday, December 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'10 எண்றதுக்குள்ள' படத்தை அடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி தற்போது வெளிவந்துள்ளது.


வரும் ஜனவரி 10ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளதாகவும், மூன்று நாட்கள் சென்னையில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தகட்டமாக மலேசியாவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில்தான் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் இருவேடங்களில் நடிக்கவுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யாமேனன் நடிக்கவுள்ளனர்.

அதிரடி ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தை 'புலி' தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபுதமீன் தயாரிக்கவுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்த படத்தின் அதிகாரபூர்வமான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளிவரும் என செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.