close
Choose your channels

தாய் சேய் இருவருக்கும்… கேப்டன் விராட் கோலியின் வேற லெவல் மகளிர் தின வாழ்த்து!

Monday, March 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு “வாமிகா’‘ எனப் பெயர் வைத்த இத்தம்பதி இருவரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதுவரை வாமிகாவின் புகைப்படத்தை வெளியிடாத கேப்டன் விராட் கோலி தற்போது அனுஷ்காவிடம் கொஞ்சி விளையாடும் தனது குழந்தையின் புகைப்படத் வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்திலும் வாமிகாவின் முகம் தெரியவில்லை. இருந்தாலும் அம்மா, மகள் இருவரின் பாசப் பிணைப்பை இந்தப் புகைப்படத்தில் பார்க்க முடிகிறது. இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட விராட் கோலி அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார்.

அதில், “குழந்தை பிறப்பு என்பதை பார்ப்பது ஒரு மனிதனுக்கு முதுகுத் தண்டை குளிர்விப்பது போன்றது. நம்ப முடியாத மற்றொரு ஆச்சரியமான அனுபவம். அதனை பார்த்த பிறகு பெண்களின் உண்மையான வலிமையையும் தெய்வீகத்தையும் உணரமுடிகிறது. மேலும் கடவுள் அவர்களுக்கு ஏன் ஒரு உயிரை படைக்கக்கூடிய சக்தியைக் கொடுத்தார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். ஏனென்றால் அவர்கள் ஆண்களை விட மிகவும் வலிமையானவர்கள். என் வாழ்க்கையில் மிகவும் சக்தி மிக்க இரக்கமுள்ள மற்றும் வலிமையான பெண்ணுக்கும் தனது தாயை போல வளர போகிறவளுக்கும் அற்புதமான மகளிர் தினம்” எனத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.