close
Choose your channels

தவறு தான், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: 'விருமன்' பிரபலம் பேட்டி!

Friday, August 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் உருவான திரைப்படம் ’விருமன்’ சமீபத்தில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்றும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவர் தான் செய்த தவறுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ‘விருமன்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில், ‘கஞ்சாப்பூ கண்ணாலேயே’ என்ற வரிகள் வருகிறது. இந்த வரிகளுக்கு நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இளைஞர்களும் தற்போது போதை பழக்கத்திற்கு அடிமையாக வரும் நிலையில் கஞ்சாவை முன்னிலைப்படுத்தி பாடல் வரிகள் இடம்பெறுவது நியாயமா என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த பாடலாசிரியர் மணிமாறன், ‘கஞ்சாப்பூ பாடல் வரிகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் மயக்கம் தன்மைக்காக பெண்களை கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும் கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் தன்னுடைய வார்த்தைகள் தவறானது தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றும் அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.