close
Choose your channels

விஜயகாந்த் ஒரு சாமி.. அஞ்சலி செலுத்திய பின் விஷால் பேட்டி..!

Tuesday, January 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜயகாந்த் ஒரு சாமி என்றும் மக்கள் அவரை சாமியாக தான் பார்க்கிறார்கள் என்றும் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்

வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் விஷால், விஜயகாந்தின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

விஜயகாந்த் நல்ல மனதுடைய ஒரு மனிதர். நல்ல அரசியல்வாதி. தைரியமான அரசியல்வாதி. விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே பலரை அவரை சாமி என்றுதான் அழைத்தார்கள். ஒருவர் மறைந்த பிறகு எல்லோருமே சாமி என்று அழைப்பார்கள். ஆனால் கேப்டன் அவர்கள் உயிரோடு இருக்கும் போது மக்கள் அவரை சாமி என்று அழைத்தார்கள்

விஜயகாந்த் அலுவலகத்தில் எப்போதும் சமையல் நடந்து கொண்டே இருக்கும். ஒரு நாள் இரண்டு நாள் செய்யலாம், ஆனால் ஆண்டு முழுவதும் செய்தவர் விஜயகாந்த். அனைவரையும் சரிசமமாக பார்த்த ஒரே நடிகர் விஜயகாந்த்தான்.

கேப்டன் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது கொடுக்கிறார்களோ இல்லையோ, பாரத தேசத்தில் உள்ள அனைவரும் மனதார அஞ்சலி செலுத்தினார்கள். விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் 19ஆம் தேதி அஞ்சலி கூட்டம் நடைபெறும்

நடிகர் சங்க கட்டடத்திற்கு கண்டிப்பாக விஜயகாந்த் பெயரை வைப்போம். அவருடைய பெயரை வைப்பதில் யாருக்கும் எந்த விதமான கருத்து வேறுபாடும் இருக்காது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வரும்’ என்று விஷால் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos