close
Choose your channels

ஆகஸ்ட் 26ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து: திடீர் அறிவிப்பு ஏன்?

Tuesday, August 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாகவே ஜிஎஸ்டி உள்பட பல்வேறு காரணங்களுக்காக படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதும், திரையரங்குகள் மூடப்படுவதுமான நிகழ்வுகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி சனிக்கிழமை தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா, சென்னையில் பிரமாண்டமாகக் கொண்டாடப்படவுள்ளதாகவும், இந்த விழாவில் அனைத்து திரையுலகினர்களும் கலந்து கொள்ள வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்யுமாறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் ஸ்டண்ட் யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் 26ஆம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.