close
Choose your channels

டுவிட்டரில் இருந்து திடீரென விலகிய நடிகர் விவேக்: என்ன காரணம்?

Wednesday, April 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருந்து மே 3ஆம் தேதி வரை விலகுவதாக நடிகர் விவேக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே டுவிட்டரில் சமூக கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருபவர் நடிகர் விவேக். குறிப்பாக மரம் வளர்ப்பதன் அவசியத்தை பல டுவிட்டுகள் மூலம் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய கொரோனா குறித்தும் ஒருசில விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மே 3 வரை சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாகவும் ஒருசில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மே 3ஆம் தேதி தான் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘தாராள பிரபு’ படத்தில் விவேக் நடித்த டாக்டர் வேடத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.