close
Choose your channels

அந்த 2 பேரை காணவில்லை, உயிருக்கு ஆபத்தா? விஷால் அச்சம்

Thursday, December 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஒரு வாய்ப்பாக இன்று மதியம் 3 மணிக்குள் முன்மொழிந்த அந்த இரண்டு பேர்களும் தேர்தல் ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெடு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து விஷால் தனது டுவிட்டரில், 'நேரம் கடந்து கொண்டே போகிறது. தீபன் மற்றும் சுமதி என்ற அந்த இரண்டு பேர்களையும் காணவில்லை. எங்கிருக்கின்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சுகிறேன்.

நான் தேர்தலில் போட்டியிடுவது, வெற்றி பெறுவது அல்லது தோல்வி அடைவது முக்கியமில்லை, அந்த இரண்டு பேர்களின் பாதுகாப்பு முக்கியம். ஜனநாயகம் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது' என்று கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் கொடுத்த கெடு முடிய இன்னும் ஒருசில நிமிடங்களே இருப்பதால் விஷாலுக்கான வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.