close
Choose your channels

பிக்பாஸ் எவிக்சன்: ஆபத்தான நிலையில் இருக்கும் மூன்று போட்டியாளர்கள்!

Thursday, December 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 88 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த வாரம் அக்சரா மற்றும் வருண் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டது திருப்புமுனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டிருப்பதாக பிக்பாஸ் கூறியுள்ள நிலையில் அதில் 3 போட்டியாளர்கள் மிக குறைந்த வாக்குகள் பெற்று ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஞ்சீவ், அமீர் மற்றும் சிபி ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் இவர்கள் மூவருக்கும் இடையே உள்ள வாக்கு சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே இந்த மூவரில் ஒருவரோ அல்லது இருவரோ இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் ராஜு, பிரியங்கா மற்றும் நிரூப் ஆகிய மூவரும் அதிகபட்சமாக வாக்குகளை பெற்று பாதுகாப்பான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.