close
Choose your channels

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் புதிய நபர் யார்?

Tuesday, June 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு அல்லது மூன்று வாரம் அமைதியாக சென்று கொண்டிருந்தாலும் அதன் பின்னர் இரண்டு குரூப்புகள் பிரிந்து யுத்த களமாக மாறுவது வழக்கமான ஒன்று. குறிப்பாக டாஸ்க் ஆரம்பித்துவிட்டால் போட்டியாளர்களிடையே போட்டியும் பொறாமையும் உண்டாகி ரணகளமாவது உண்டு

ஆனால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரச்சனைக்குரியவர்கள் அதிகம் இருப்பது போல் தெரிவதால் வெகுசீக்கிரம் யுத்தகளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் அபிராமி, சாக்சி மற்றும் ஷெரின் மூவரும் ஜாலியாக 'பாப்பா பாடும் பாட்டு' என்ற பாடலை பாடி கொண்டிருக்க அதை பார்த்த சாண்டி, 'அனேகமாக இந்த வீடு அடுத்த வாரம் யுத்தகளமாக மாறும் என்று நினைக்கின்றேன். அந்த யுத்தத்தில் நானும் இருப்பேன் என்று நினைக்கின்றேன்' என்று கூறுகிறார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் யுத்தம் சாண்டி அல்லது வனிதாவால் வரவும், இவர்கள் இருவரும் தனித்தனி அணியாக பிரியவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இருவரும் ஒரே அணியில் தப்பித்தவறி இருந்துவிட்டால் எதிர் அணிக்கு வில்லங்கம் தான்

மேலும் இன்றைய புரமோவில் 'இன்னைக்கி யாரோ புதுசா வர்றாங்க போலயே' என்ற வாசகம் இருப்பதும், பிக்பாஸ் வீட்டின் வெளிக்கதவு திறக்கும் காட்சியும் இருப்பதால் புதிய நபர் வீட்டிற்குள் வரும் காட்சியும் இன்று உண்டு என தெரிகிறது. வைல்ட் கார்ட் எண்ட்ரியா? அல்லது விருந்தினரா? என்பதை இன்று இரவு நிகழ்ச்சியில் பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.