close
Choose your channels

இரத்தத்தில எழுதின கதையை மையால தொடர முடியாது: 'கே.ஜி.எஃப் 2' டிரைலர்!

Sunday, March 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த பான் - இந்தியா திரைப்படமான ’கே.ஜி.எஃப் 2’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் நடிகர் சூர்யா இந்த டிரைலரை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

’இரத்தத்தில் எழுதிய கதை இது, இதனை மையால் எழுத முடியாது, அப்படி எழுத வேண்டுமானால் நீயும் ரத்தத்தில் குளிக்க வேண்டும்’ என்ற வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த டிரைலரில் முதல் பாகத்தை விட அதிகமான வன்முறை மற்றும் ஆக்சன் காட்சிகள் இருக்கும் என தெரியவருகிறது.

ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது என்பதும் தமிழில் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய்தத் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசர் 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிட்டு சாதனை செய்த நிலையில் இந்த டிரைலர் அதைவிட அதிகமான சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.