close
Choose your channels

யாஷிகாவை லவ் பண்றது நிஜம்தான்: ஒப்புக்கொண்ட மகத் 

Tuesday, August 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய மகத், பாலிவுட் நடிகை பிராய்ச்சி தேசாயுடன் காதல் கொண்டது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கல்ந்து கொண்ட மகத், ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிடம் நெருங்கி பழகினார். குறிப்பாக அவர் யாஷிகாவிடம் காதல் கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து கருத்து கூறிய பிராய்ச்சி தேசாய், தனக்கு மகத்தை நன்றாக தெரியும் என்றும், அவர் தன்னை தவிர வேறு யாரையும் காதலிக்க வாய்பே இல்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் இன்று நீதிமன்ற விசாரணை போன்ற காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. அதில் யாஷிகா மகத்திடம் 'என்னிடம் பேசும்போது ஒருமாதிரியாகவும், வெளியில் பேசும்போது ஒரு மாதிரியாகவும் நீங்கள் இருப்பது எனக்கு மனவேதனை தருகிறது' என்று கூறுகிறார்

அதற்கு பதில் கூறும் மகத், 'வெளியில் எனக்கு ஒரு காதலி இருக்கின்றார் என்று தெரிந்தும் இங்கே உள்ள சூழ்நிலை காரணமாக உன் மேல் எனக்கு காதல் இருப்பது உண்மை' என்று கூறுகிறார். இதற்கு யாஷிகா ஒரு புன்சிரிப்பை உதிர்க்கின்றார். இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்றே யாருக்கும் புரியவில்லை

இதனிடையே 'வெளியே உள்ள காதல், உள்ளே உள்ள காதல், எது நிஜம்? என்று பாலாஜி கேட்கின்றார். அதற்கு மகத் பதில் கூறாமல் அமைதியாக இருப்பது போன்று புரமோ முடிகிறது.

வழக்கம்போல் இந்த புரமோவும் மொக்கையாகுமா? அல்லது இந்த வாரம் வெளியேற போகும் மகத்தின் வாழ்க்கையில் புயல் அடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.