close
Choose your channels

8 வருடத்திற்கு முன் 4 நாட்கள் மட்டுமே நடித்த படம்: யோகிபாபு

Friday, October 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக யோகிபாபு பெரும்பாலான படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தாலும், ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அவர் முக்கிய வேடங்களில் நடித்த தர்மபிரபு, ஜாம்பி, கூர்கா’ போன்ற படங்கள் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ’பட்லர் பாபு’ என்ற படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும், அவர்தான் இந்த படத்தின் ஹீரோ என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவலை யோகிபாபு மறுத்துள்ளார். ’பட்லர் பாபு’ என்ற படத்தில் தான் எட்டு வருடங்களுக்கு முன் நான்கே நான்கு நாட்கள் மட்டும் நடித்து கொடுத்ததாகவும், அந்த படத்தில் தான் காமெடி கேரக்டரில் மட்டும் நடந்திருப்பதாகவும், ஹீரோ கேரக்டரில் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த படத்தில் தனக்கு யாரும் வசனம் எழுதித் தரவில்லை என்றும் தானே தனது காமெடி காட்சிகளுக்கான வசனத்தை எழுதிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுதிர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரோபோ சங்கர், மயில்சாமி, தாடி பாலாஜி, உள்பட பலர் நடித்துள்ளனர். கணேஷ் ராகவேந்திரா இசையில் உருவாகியுள்ள இந்த படம் இம்மாதம் வெளியாகவுள்ளது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.