close
Choose your channels

18 வயது தமிழக இளம் விஞ்ஞானிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

Saturday, June 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தை சேர்ந்த 18 வயது இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் உருவாக்கிய வெறும் 64 கிராம் கொண்ட 'கலாம்சட்' என்ற செயற்கைக்கோள் சமீபத்தில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
73 மைல்கள் உயரம் தொடும் இந்த கலாம்சாட், விண்வெளியில் சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் தங்கி தகவல்களைச் சேகரிக்கும் என்றும் இதன் மூலம் 3D பிரின்டட் கார்பன் இழைகள் விண்வெளியில் எத்தனை நேரம் பயணிக்கமுடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், , பூமியின் கதிர்வீச்சு, முடுக்கம், சுழற்சி மற்றும் காந்தப்புலன் குறித்த ஆய்வுகளையும் இது மேற்கொள்ளும்.
இத்தகைய பெருமையுடைய இந்த செயற்கைக்கோளை உருவாக்கிய தமிழக இளைஞருக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. தமிழக அரசு ரூ.10 லட்சம் பரிசு அளித்து ரிஃபாத் ஷாரூகை கெளரவித்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூகவலைத்தளத்தில் ரிஃபாத் ஷாரூக்கை வாழ்த்தியுள்ளார். இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ரிஃபாத் ஷாரூக், 'உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி. எங்கள் டீம் முழுவதுமே உங்கள் ரசிகர்கள் தான். நங்கள் உங்கள் இசையை கேட்டுத்தான் பாசிட்டிவ் எண்ணங்களை பெற்றோம்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.