close
Choose your channels

மறு திருமண செய்தி குறித்து இயக்குனர் விஜய் விளக்கம்

Friday, March 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் விவாகரத்து வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளிவந்து, இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பல ஊடகங்களில் விஜய் மறு திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இன்னும் மனதளவில் விஜய்யை விரும்பும் அமலாபால் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தனது மறு திருமண செய்தி குறித்து இயக்குனர் விஜய் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றது. இது போன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத செய்திகள் என்னை மேலும் மேலும் வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இது போன்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற தார்மீக உரிமை எனக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய கடமை. அதை முழு மனதோடு நிறைவேற்றுவேன்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.