close
Choose your channels

அரசு செலவில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம். முதல்வர் அறிவிப்பு

Wednesday, August 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தாதா சாகேப் பால்கே என்ற உயரிய விருது பெற்று தமிழர்களுக்கும் தமிழ் திரையுலகிற்கும் பெருமை சேர்த்த சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என அவருடைய ரசிகர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் பல நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தமிழக அரசு இடம் ஒதுக்கி தந்திருந்தபோதிலும், மணி மண்டபத்தின் பணிகள் இதுவரை தொடங்காமல் இருந்தது.


இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தபோது, "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று சிவாஜி கணேசன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும்" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகினர்களுக்கே ஒரு இனிப்பான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.