close
Choose your channels

செம உற்சாகம்… பார்டிக்கு ரெடியான நடிகை கங்கனா ரனாவத்… காரணம் இதுதான்?

Saturday, July 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பை தவிர, இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரதங்களை எடுத்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய முதல் படத்தின் ரிலீசுக்குப் பிறகு பார்டிக்கு தயாராகி இருப்பதாக அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத், ராணி லட்சுமிபாயின் வரலாற்று திரைப்படமான ‘மணிகர்னிகா தி குயின் ஆஃப் ஜான்சி‘ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் திடீரென விலகினார். இதையடுத்து அந்தப் படத்தை திறமையாக இயக்கி வெளியிட்டு அதில் கங்கனா வெற்றியும் பெற்றார்.

இதைத்தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரைப்படமான ‘தலைவி’ திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமானார். தொடர்ந்து ‘மணிகர்னிகா ஃபிலிம்ஸ்‘ எனும் பெயரில் திரைப்பட கம்பெனியை ஆரம்பித்த அவர், தான் நடித்த ‘ரிவால்வர் ராணி‘ திரைப்படத்தின் இயக்குநர் சாய் கபீருடன் இணைந்து ‘டிக்கு வெட்ஸ் ஷெரு‘ எனும் திரைப்படத்தை தயாரித்து அதை வெளியிட்டு இருக்கிறார்.

ஜுன் 23 ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் சாய்கபீர் இயக்கிய நிலையில் அதில் நடிகை கங்கனா ரனாவத், நடிகர் இர்ஃபார்கான், நவாசுதீன் சித்திக், அவ்னீத் கவுடா ஆகியோர் நடித்துள்ளார். காதல் மற்றும் காமெடி கலந்த இந்தத் திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் அதுகுறித்த உற்சாகத்தில் நடிகை கங்கனா ரனாவத் தற்போது பார்டி கொண்டாடுவதாக அறிவித்துள்ளார்.

‘டிக்கு வெட்ஸ் ஷெரு‘ திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் பார்பி பொம்மை போன்று உடையணிந்து வந்த நடிகை கங்கனா அதே உடையணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் அம்மா சொன்னாள் விளையாட ஒரு நேரம் இருக்கிறது, படிக்க ஒரு நேரம் இருக்கிறது. ஆனால் நான் சொல்கிறேன்… வேலை செய்ய ஒரு நேரம் இருக்கிறது, பார்டிக்கு ஒரு நேரம் இருக்கிறது. குறிப்பாக முதல் தயாரிப்புக்கு சூப்பர் ஹிட் ஆகும்போது இது ஒரு பிரம்மாண்ட பார்டிக்கான நேரம் என்ற குறிப்புகளோடு நடிகை கங்கனா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றனர்.

மணிகர்னிகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனது முதல் படம் வெற்றிப் பெற்றுள்ளதாக கூறியுள்ள நிலையில் நடிகை கங்கனா அடுத்து மறைந்த் பிரதமர் இந்திராகாந்தியின் எமெர்ஜென்சி காலகட்டம் தொடர்பாக அவர் இயக்கியும் நடித்தும் வரும் எமெர்ஜென்சி திரைப்படத்தை அவரே தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.