close
Choose your channels

முடிவுக்கு வந்த ரகுல் ப்ரித்திசிங்கின் அடுத்த தமிழ்ப்படம்

Tuesday, January 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தியுடன் ரகுல் ப்ரித்திசிங் நடித்த 'தேவ்' திரைப்படம் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரகுல் ப்ரித்திசிங் நடித்த அடுத்த தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வந்த 'என்.ஜி.கே. படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை சமீபத்தில் சூர்யா முடித்தார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வந்த ரகுல் ப்ரித்திசிங்கும் நேற்றுடன் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடித்தார். இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரகுல் கூறியபோது, 'இந்த படத்தில் நடித்ததால் ஜீனியஸ் இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து எனக்கு அருமையான அனுபவம் கிடைத்தது. சூர்யாவுடன் இணைந்து நடித்ததில் மிகவும் பெருமை அடைகிறேன். இந்த படத்தை திரையில் காண ரசிகர்களை போல் நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.