close
Choose your channels

வைல்ட் கார்டு எண்ட்ரி ஆகும் திருநங்கை: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

Monday, July 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பிக்பாஸ் 3' தமிழ் நிகழ்ச்சி கடந்த ஐந்து வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து பாத்திமாபாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகிய 4 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் 12 பேர் மட்டுமே இருப்பதால் இன்னும் ஒருவர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ஆல்யா மானசா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீ ரெட்டி, சங்கீதா, விசித்திரா உள்பட பலர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவர்களில் யார் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

இந்த நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் மீராமிதுன் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்த மாதிரி தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒருவர் எண்ட்ரி ஆகவிருப்பதாகவும், அவர் ஒரு திருநங்கை தமன்னா என்றும் கூறப்படுகிறது. திருநங்கை தமன்னா, நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகை என்பதும் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கு பிக்பாஸ் வீட்டில் தமன்னா நுழைந்து பரபரப்பை ஏற்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.