close
Choose your channels

கமல் அறிவிப்பு குறித்து அப்துல்கலாம் பேரன் தெரிவித்த கருத்து

Thursday, January 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அறிவித்துவிட்டு அன்றைய தினமே மக்களை சந்திக்கவிருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் வார இதழ் ஒன்றில் எழுதியுள்ள தொடரில், இந்த பயணத்தை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வீட்டில் இருந்து தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கலாம் அவர்களுக்குப் பல கனவுகள் இருந்தன. அதேபோன்ற கனவுகளைக் கொண்டவர்களில்  நானும் ஒருவன் என்று கமல் கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த அறிவிப்புக்கு அப்துல்கலாமின் பேரன் சலீம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அப்துல்கலாம் வீட்டில் இருந்து அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளதாக கமல் அறிவித்தது மகிழ்ச்சி. என்ன மாதிரியான விழிப்புணர்வை கமல் ஏற்படுத்துகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று சலீம் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.