close
Choose your channels

சூர்யாவை சூழ்ந்த 5000 பேர்: படப்பிடிப்பில் பரபரப்பு

Monday, August 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்ஜிகே' படத்தின் படப்பிடிப்பு ராஜாமுந்திரியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன

சூர்யாவின் 'என்ஜிகே' படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெறுகிறது என இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டதிலிருந்து. அந்த பகுதியில் உள்ள சூர்யா ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர்

இந்த நிலையில் நேற்று சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு குவிந்த ரசிகர்கள் கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சூர்யாவை சூழ்ந்து ராஜு பாய் , சூர்யா என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் அவருக்கு அன்பு வரவேற்பு அளித்தனர். சூர்யாவும் அவர்களுக்கு கையசைத்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டார்.

தமிழகத்தை போலவே தெலுங்கு மாநிலங்களிலும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. எனவே நேற்றைய படப்பிடிப்பில் சூர்யாவை ரசிகர்களை சூழ்ந்ததால் இந்த படப்பிடிப்பு தமிழ் நாட்டில் நடக்கிறதா ? அல்லது ஆந்திராவில்லா ? என்று ஒரு யோசிக்க வைத்தது என்று தான் கூறவேண்டும்.

ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு , S.R. பிரபு தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் உள்பட பலர் நடித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக வெளிவரும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.